பனுவல் மணம்

இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, August 21, 2023

 

 

கூளமாதாரி பெருமாள் முருகன்

 

 

கதை களம் கொங்கு மண்டலம் , கதை பண்ணை அடிமையாக விடப்படும் சிறுவர்கள் பற்றியது. அதனால் இது ஒரு துன்பியல் நாவலாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் வழக்கமாக இருக்கும் தமிழ் நாவல் போல் அல்லாமல் உள்ளதால் இதன் கலை வெற்றி கைகூடி உள்ளது எனலாம் . தமிழின் சிறந்த நுறு புத்தகங்கள் என்ற எஸ் ரா வின் பட்டியலில் இந்த புத்தகம் உள்ளது. நாவல் எடுத்துக்கொண்ட களத்தில் சிறப்பாகவே உள்ளது, பண்ணை அடிமை முறை இப்போது இல்லை என்றாலும் அவர்களின் கடந்தகால நினைவுகளாக இந்த நாவல் இருக்கும் . இதில் வரும் சிறுவர்களுக்கு பெயர்கள் இருந்தாலும் எல்லாம் காரண பெயர்கள் தான் . மொண்டி , கூளையன் , வவுறி , செவிடி , நெடும்பன் . ஆனால் பண்ணையார் வீட்டு பசங்களுக்கு மணி , செல்வம் என்றுதான் பெயர்கள் உள்ளது . சிறுவர்கள் கடுமையான வேலை வங்கபடுகிரர்கள் ஆடு மேய்ப்பது தான் அவர்களுக்கு விடுதலை .

வீரனை வளர்க்கும் கூளையன் திருவிழாவில் அனுமதிக்காது பொது தான் அவர்கள் எவ்வளவு ஓடுக்கப்படுகிரர்கள் என்பது புரிகிறது , இத்தனைக்கும் அவர்கள் ஆடு மேய்க்கும் போது ஏறி  விளையாடும் அதே முனியன் கோவிலில் அவர்கள் திருவிழாவின்போது கிட்ட போகமுடியாது . நிலக்காட்சிகள் நாவல் முடிந்தபின்பும் நம் மனதில் நிற்கிறது காரணம் துள்ளியமான விவரணைகள் . பொட்டல் காடும் பனைமரமும் ஏரியும் மனதில் நீங்கா  கட்சிகளாக உள்ளது. நான் எல்லாம் ஒரு பனிரெண்டு வருடங்கள் ஆடு   மேய்த்து இருக்கிறேன் விடுமுறை நாள் என்றால் அதான் வேலை என்பதால் இந்த நாவல் இன்னும் எனக்கு நெருக்கமாக உள்ளது  , அதனால் ஆடு மேய்ப்பது பராமரிப்பது போன்றவைகள்  பற்றியும் சிறப்பாகவே எழுதி உள்ளார் . பொட்டல் காடும் செவிடி வீரன் பிரிவும் நம்மை எதோ செய்கிறது ...

 

 நாவலின் குறைகள் நிறைய தகவல் பிழைகள் இருக்கிறதாக எனக்கு படுகிறது . காடை முட்டை வெள்ளைவெளேர் என்று இருந்தது என்று வருகிறது , கௌதாரி முட்டை தான் வெள்ளை காடை முட்டை பழுப்பு புள்ளிகள் இருக்கும் .கூளையன் முதலில் ஆடு ஓட்டி கொண்டு வருவான் அப்போ சிறிது நேரம் வேப்பம்மரத்து அடியில் தூங்கி எழுவான் அப்போது முதுகில் இருக்கும் தூசி போக  துண்டு போட்டு துடைக்கும் பொது அழுக்கு வரும் காரணம் குளிபதில்லை என்று வருகிறது ஆனால் அடுத்து அனைவரும் கிணத்தில் குளிக்கிறார்கள் இது தினம் நடப்பது தான் என வருகிறது , தினம் குளிக்கும் கூளையனுக்கு பிறகு எப்படி அழுக்கு வந்தது ஏன் குளிக்கவில்லை என்று பெருமாள் எழுதுகிறார் என்றல் சக்கிலிய பயல்கள் குளிபதில்லை என்பதை நிறுவ .

 செல்வம் கூளையன் பட்டி போடும் பொது இரவில் கள் எடுக்க கூளையன் பனைமரம் ஏறுகிறான் இருட்டில் கள் ஊற்றும்போது அதில் உள்ள தேனீ எல்லாம் ஊதிவிட்டு ஊற்றுவான் இருட்டில் எப்படி தேனீ தெரிந்தது ? பிறகு அவன் மரத்திலே குடிப்பான் அபோது அவன் வாய்க்கு தேனீ போவிடத்தை துப்புவான் இது எப்படி முனாடியே அவன் உத்தி தானே கள் உற்றினான் முன்னுக்கு பின் முரன். .